ஞாயிறு, 12 ஜூன், 2011

திரியாய் அம்மன்.










யாழ்ப்பாணத்திற்கு தெற்கே கிளிநெச்சி நகருக்கு வடக்கே பச்சிலைப்பள்ளி என்றழைக்கப்படும் பளை பிரதேசத்தில் முகாவில இயக்கச்சியில் ஆற்றங்கயோரமாக அமைந்திருக்கின்ற பழைமைவாய்ந்த புதுமைமிக்க அம்மன் தான் திரியாய் அம்மன். அம்மன் ஆலயத்தின் பொங்கல் சென்ற வெள்ளிக்கிழமை
(10.06.2011) வெகு விமர்சையாக நடைபெற்றது.
பெங்கலன்று நானும் எனது நிறுவனத்தின் வேலைகளுக்கு மதியம் 10.00 முழுக்கு போட்டுவிட்டு அம்மனை தரிசிப்பதற்காள எனது முதாததையரின் கிராமத்துக்கு சென்றேன். அதற்கிடையில் எனது நண்பரான வதன் அவர்களும் அவர்பணிபுரியும் அரச நிறுவனத்துக்கு முழுக்கு போட்டுவிட்டு பளை கிராமத்தில் வந்து இறங்கி நின்று என்னையும் வரைவேற்று அவருடைய செந்த ஊரான இயக்கசிக்கு சென்று தங்கி இரவு 8.00 மணியளவில் ஆலயத்தக்கு செல்வதற்காக எமது பயணத்தை தொடர்ந்தோம் கிராமத்தின் சிறப்புக்களை அன்று எங்களின் கண்களால் மட்டுமல்ல எமது மனங்களாலும் அறிந்து கொண்டோம். பனை,தென்னைம் தோப்புகள் மரவளங்கள் குளங்கள் ஆறுகள் என்பவற்றை கடந்து திரியாய் அம்மன் ஆலயத்திற்குள் நுளைந்தோம். அருமையான இயற்கை காற்றோட்டம். நகரத்தில் காசுகொடுத்தாலும் வாங்கமுடியாது. சரி ஆலயத்திற்கு வருவோம் யுத்தத்தால் எம் அம்மனும் பாதிக்கப்பட்டிருப்பதை பார்தோம் தற்போது கோயில் வேலைகள் நடைபெற்று வருகின்றது . அம்மன் பாலஸ்தானம் செய்யப்பட்டு சிறிய கொட்டகையிலே இருந்து மக்களுக்காக அருள்பாலித்தக்கொண்டிருந்தார். இரவிரவாக துக்குக்காவடிகன் ,ஆட்டக்காவடிகள் என விடியும்வரை ஆலயத்திற்கு வந்தவண்ணமிருந்தது.
மக்கள் தமது நேர்த்திக்கடன் களை நிறைவெற்றிக்கொண்டிருந்ததர்கள்.

இதற்கிடையிலே நாங்கள் ஒரு முதியவர் ஒருவரை தொடர்புகொண்டு அவரை அழைத்தவந்து அலய அருகிலே ஒரு மரநிழலிலே அவருடன் அமர்ந்து ஆலயத்தின் புதுமைகளை கோட்டோம் அவரும் இவ்வாலய வரலாறுகளை அடுக்கிய வண்ணமிருந்தார். அவருடன் கலங்துரையாடியவை பின்னர் தருகின்றேன் ஏன் என்றால் இன்றும் எனது வேலைக்கு முழுக்குபோடுவதற்கான அனுமதி வாங்கிவிட்டேன். வற்றாப்பளை அம்மன் ஆலயம் செல்வதற்காக தயாராக வேண்டும். திரிய் அம்மன் ஆலய காவடி பார்ப்பதற்கென்று பலர் வருவார்களாம் என்னென்றால் அப்படி அருமையான காவடியாட்டம் ஜயாவும் சொன்னார் தம்பி பொறடா மசார் பொடியள் காவடியோடு வருவாங்கள் ஆட்டத்தை பாரடா என்றார்.
அத்தோடு சல்லியடி பொடியளும் பின்னுக்கு வருவார்கள் என்றார் நள்ளிரவை கடந்தும் வரவில்லை அதிகாலை ஒருமணியளவில் ஜயா சொன்னர் தம்பி டேய் நட்டுவ மேள சத்தம் கோட்குதடா மாசர் பொடியங்களின் காவடி வருகுதடா பருங்கோ என்றார்.

பல இளம் இளைஞர்கள் கவடியெடுத்து வந்ததர்கள். நாங்களும் இவங்கள் என்ன வளமையாக எல்லாரும் ஆடுமாய் பேலவே அடுவாங்கள் என்று மனதுக்குள் நினைத்தவண்ணம் இருந்தோம். நித்திரையாக இருந்தமக்களெல்லம் எழுந்து காவடியை சுற்றி நின்றார்கள். ஆலய நிர்வாகமும் ஓலிபெருக்கியில் அறிவித்தார்கள் காவடிக்கு முன்னால் நிற்பவர்கள் அமர்ந்திருந்து மற்றவர்களையும் பார்கவைக்குமாறு வேண்டினார்கள்

உனடியாக நாமும் சென்று காவடியாட்டத்தை பார்த்து ரசித்தோம். மிக்க அருமை வார்தையாலையோ சொற்களாலையோ வர்ணிக்கமுடியாது. அடுத்து சல்லியடி காரர்களின் காவடி என்றார்கள் அதுவும் அருமையாகவிருந்தது. ஆலயத்தை பற்றைகளும் ஆறுமான இயற்கைக்கு இயற்கையே பார்த்து கண்ணுற்றுவிடும் என்றுதான் சொல்ல வேண்டும். அவ்வாறான அழகான இடம்.

சரி இனி ஆலய நிர்வானத்தினர் ஒலிபெருக்கியில் விடிய விடிய கூவிய வண்ணமிருந்ததர்கள். அலய வளர்ச்சிக்கு பணமாகவே பொருளாகவே தருமாறு வேண்டி நிற்கின்றோம் என்றனர். ஆலயத்திற்கு பணம் செலுத்துவது என்பது எனக்கு பிடிக்காத காரியம் என்றாலும் எனது முததையரின் வேண்டுகோளிற்கினங்க குறித்த ஆலய உற்சபகால பணிமனையில் செலுத்துவதற்கு சென்றுறோம். அங்கு நிர்வாகத்தினரிடம் ஒரு வேண்டுகோளை வைத்தோம் சிறு சச்சரவுக்கு மத்தியில் எமது சிறுதொகை பணத்தை வழங்க முன்வந்தோம் ஆலய த்தில் பணம் கொடுப்பவர்களின் பெயர் வாசிப்பது என்பது எமக்கு பிடிக்கவில்லை. பலர் பணத்தை கொடுத்துவிட்டு ஊரின் பெயர், தன்னுடைய பெயர் என்பவற்றை ஒலிபொருக்கியில் ஒலிப்பதற்காக கொடுத்தார்கள் எதே அதில் சென்னால் தான் கடவுளுக்கு விழங்குமோதெரியல்லை. எமது வேண்கோளும் இதுதான் எமக்கு பெயர் குறிப்பிடாத பற்றிசீட்டு தருமாறு வேண்டியோம் அவர்கள் எற்றுக்கொள்ளவில்லை மக்களே சிந்தியுங்கள் பெயரடிப்பதற்றல்ல பொங்கல் நடைபெற்றது. தொண்டுசெய்தோம் அவ்வளவும்தான். நல்ல காரியத்துக்கு பயன் பெறவேண்டும் . ஆலயம் வளர்ச்சியடைவதில பக்தி வெறுபடுவதில்லை. சிந்தியுங்கள் எமது வாழ்வாதரங்களை உயர்த்த நாம முன்வர வேண்டும். அலய சுழலில் அல்லது அயற்கிராமங்களில் ஒரு பாலர் பாடசாலையோ அல்லது எழைகளுக்கு உதவியோ செய்ய வேண்டும் என்பதே எமது விருப்பமும் கடவுளின் விருப்பமும் .

சரிய காலை எமது அலய பயணத்தை முடித்து விடு திரும்பும் போது ஆலயத்தின் ஒலிபொருக்கியில் அரசியல் பேசப்பட்டது. மக்ககே பக்திக்கும் மரியாதைக்கும் உரிய ஆலத்தை வீண்விரமாகாது கடவுளின் பளிக்கு ஆளாகிவடாதிர்கள்.

(இன்னும் சிறு வாரத்தில் ஆலய வரலாறு பற்றிய தகவல் நாம் இணைக்கப்படும்)

நன்றி
நவநீதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக