வியாழன், 16 ஜூன், 2011

வற்றாப்பளை அம்மன்.


இலங்கையின் வடக்கே வனமும் வனம் சார்ந்த தீவாம் முல்லைதீவு மாவட்டத்தில் முள்ளியவளை கிராமத்தில் அமைந்துள்ள பத்தாப்பளை என்னும் கிராமம் தற்போது மருகி வற்றாப்பளை என்று அழைக்கப்படுகின்றது. வற்றப்பளைக்கு மட்டுமல்ல முல்லைதீவிற்கே சிறப்பு தான் வற்றப்பளையம்மன்.







வற்றப்பளை அம்மன் ஆலய பொங்கல் உற்சபம் 13.06.2011 திங்கட்கிழமை பொ ங்கல் நடைபெற்றது. அவ் பொங்கலுக்கும் எமது குழு சென்றது. எங்கு பொங்கல் இடம்பெற்றாலும் நமது குழு அங்கே நிக்கும்.
சரி அலயத்திற்கான பயண மதியம் இருநண்பர்களோடு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு மாலை சாவகச்சேரியில் ஓருவருடன் மூன்றான நண்பர்களுடனான பயணம் இயக்கச்சி சந்தியில் நிறுத்தி எனது ஆருயிர் நண்பனான வதனுக்காக சந்தியில் காத்திருந்த பின்னர் மாலை 4.00 மணிக்கு எமது பயணம் போருந்து ஒன்றிலேறி பரந்தனுடாக பயணம் செய்தோம். யுத்த வடுக்கள் நிறைந்த வன்னிமண்ணை பர்த்து எமது மனம் கொதித்தது.

வழியோரமெல்லம் வாகங்கள் பல சேதமடைந்து விடுகள் மரங்கள் எல்லாம் சேதமைந்ததை பார்த்து ஒன்றை மட்டும் புரிந்தோம் இவைகளுக்கெல்லம் இப்படியென்றால் மனிதனுக்கு எப்படியிருந்திருக்கும்.


புதுக்குடியிருப்பு பாலத்தடியில் 1கிலே மிற்றரை கடப்பதற்கு மட்டும் 90நிமிடங்கள் எடுத்துது. அவ்வளவு வாகன நெருசல் .சரி ஆலயத்தை மாலை 8.00 சென்றடைந்தோம் பல லட்சம் சனங்கள் பல்வாயிரக்கணக்கான வாகனங்கள் என்று வற்றாப்பளை மண் நிரம்பி வழிந்தது



ஆலயத்திலிருந்து ஒரு கிலே மிற்றர் அளவு துரத்தில் வாகனம் நிறுத்தப்பட்டு நடையாக ஆலயத்தை சென்றடைந்தோம்

ஆலய அமைப்பு பற்றி பார்த்தால் ஆலயத்திற்கு முன்பக்கமாக நந்திக்கடலும் ஆலயத்தை சூழ வெளிகள் நிறைந்த இடைக்கிடை மரங்களுமன பிரதேசமாம் தான் வற்றப்பளை அம்மன் எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளம் தான். மக்கள் வந்து தமக்கென்று ஒரு இடத்தை வாங்கியது போல ஒரு இடத்தை தெரிவு செய்து பாய்கள் கொண்டுவந்து விரித்து தமது குடும்பத்துடன் நண்கர்களுடன் அமர்நது விடுவார்கள். அமர்ந்த பின் தான் மாறி மாறி கோயில் போய் வணங்குவார்கள். ஏனென்றால் கும்பிட சென்றால் ஆட்கள் மாறிவிடவார்கள் பிறகு குடும்பம் ஒன்று சேர்வது என்றால் கடினம் ஆதலால் தமக்கென்று இடத்தை தெரிவு செய்தவிடுவர்கள். நாங்களும் எமக்கென்று இடம் தெரிவுசெய்வதென்று இடையில் ஒருவர் மாறுவேமாகவிருந்தால் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று நிற்கவேண்டும் என்றுதான் கொள்கை. இடம் தேடுவது என்பது கடினம் இது எங்கட டம் தம்பி என்றார் ஒருவர் நாங்களும் அவரை விடவில்லை உறுதியை தாருங்கள் விட்டு விலத்தகின்றோம் என்று ஒரு இடத்தை ஆக்கிரமித்தவிட்டோம். அவர் பின்னர் எம்முடன் இணக்கத்தக்கு வந்தவிட்டர் அவர்களை எமது பயணப்பைகளுக்கு பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு நாம் கோயிலுக்கு கும்பிடுவதற்காக கோயிலுக்குள்ளே சென்றோம்.

ஆண்கள் மேலங்கியுடன் உள்ளே செல்லலாம் ஒருவாறு இடிபட்டு நெரிபட்டு அம்மனை தரிசித்தோம் ஆலயத்துக்குள் சென்றதும் எம்மையறியது ஒரு பக்தி எமக்குள்ளையே வரும் அவ்வளவுக்கு ஒரு புதுமையான கோவில் தான் வற்றாப்பளை அம்மன்.

ஆலயத்திற்கு விடிய விடிய காவடிகள் தூக்கு காவடிகள் வந்தவண்ணமிருந்தர்கள் அருமையான முறையில வாகனங்களில் வர்ண விளக்குகளால் சோடிக்கப்பட்டு தூக்கு காவடிகள் வந்தன.



வற்றப்பளை அம்மன்ஆலய வரலாற்றை அறிவதற்கானக இங்கும் ஒரு முதியவரை நாம் அணுகினோம் .
வற்றப்பளை அம்மன் கோவில் பெங்கலுக்கு எழு நாளைக்கு முன்னர் நந்திக்கடலுக்கு சென்று ஆலய பூசகர் ஒர குடத்துடன் நந்திக்கடலில் முழ்கி எழும்போது குடத்தினுன் வருகின்ற தண்ணீரை முள்ளியவளையில் அமைந்துள்ள காட்டுவிநாயகர் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டு ஒரவார காலமாக விநாயகரலயத்தில் தீபமேற்றப்பட்டிருக:குமாம். அக்காலப்பகுதியில் முள்ளியவளையை சுற்றியுள்ள பத்து அயற்கிராமங்களுக்கு ஒருவர் சென்று பொங்கலுக்கான பொருட்களை வீடுவிடாக பெற்று பிள்ளையார் ஆலயத்திற்கு கொண்டு வந்து சேர்ப்பாராம். இவ நிகழவை பாக்கு தண்டுதல் என குறிப்பிவார்கள். பின்னர் வற்றாப்பளை அம்மன் ஆலய பொங்கலன்று காலை ஆலயத்திற்கு தண்ணீரில் எரியும் தீபம் தண்டிய பொருட்கள் என்பவற்றை கொண்டவருவார்களாம். பின்னர் மாலை பெங்கல் உற்சபம் ஆரம்பமாகிவிடும் .
பல்லாயிரக்கணக்கான மக்கள் பானைவைத்து பொங்கி ஆலய உள்புறத்தில் அமைந்தள் பொங்கல் படைக்கு மண்டபத்தில் படைத்தவிட்டு வரும் மக்களுக்கெல்லாம் பகிர்ந்தளித்தபின்னர் பானையை அவிடத்தில் வைத்து விட்டு வெறும் கையுடன் தானட வீடு திரும்புவார்களால் அக்காலத்தில் ஆனால் இக்காலத்தில் படைத்தவிட்டு நேரடியாக தாங்கள் வந்த வண்டியில் கொண்டுசென்று எற்றிவிடுகின்றார்கள் என் கண்முன்னே நான் கண்டவை .

நள்ளிரவு ஆலயத்துக்குள் வழந்துவைக்கும் நிகழ்ச்சி இடம்பெறும். நள்ளிரவு பறை ஒலிக்க கோவிலின் தெற்கு புறத்திலுள்ள வீடு ஒன்றிலிருந்து தண்டிய வழந்த பொருட்கள் வளந்த பானைகள் சகிதம் ஆலயத்தை வலமம் வந்து ஆலய முன்றலின் உட்பிரகாரத்தில் வழந்த பானை வைக்கப்பட்டு பொங்கள் நடைபெறும் .மூன்று பானைகளில் வளந்து வைத்து பொங்குவார்கள். இதற்கிடையில் அலயத்தில் தண்ணீரில் தீபம் எரிந்தவண்ணமிருக்கும்.

அதிகாலை ஒர மணிக்கு பின்னர் ஆலயத்திற்கு வந்தவார்கள் வீடு திரும்பிய வண்ணமிருப்பார்கள்

இவ்வாலயத்தக்கு லண்டனில் வாளும் ஒர் அன்பர் அவர்களால் ஒரு கோயில் மணியினை அன்பளிப்பு செய்யப்பட்டது.. மணியின் சிறப்பம்சம் என்னவென்றதல் யாழ்ப்பானம் தொல்லிப்பளை தூர்கையம்மன் ஆலய மணி செய்யப்பட்ட இடத்தில் ஒரே நேரத்தில் லண்டன் நகரில் வார்க்கப்பட்டது. இவ்வாலய மணியானது சரியாக ஒலிக்குமானால் 10கிலோ மிற்றர் தூரம் கோட்கும் என்பது நிறுவன உத்தரவாதம்



இங்கு சில கலாச்சாரம் பற்றியும் எடுத்துரைக்கவேண்டியிருக்கும். ஆலய ஒலிபொருக்கியில் இளைஞர்களை யுவதிகளும் யுவதிகளை இளைஞர்களை தேடும் அறிவத்தல் கோவிலுக்கு சென்றதிலிருந்து வீடு திரும்பும் வரை ஓலித்தவண்ணமிருந்தது . தொலை தொடர்பும் பொங்கலன்று செயலிழந்த காணப்பட்டது . என்றாலும் கலாசர சீரளிவுகளும் அங்காங்கே காணப்பட்டது . கேட்பதற்கு யாருமில்லை ஆதலால் போல .

நன்றி
நவநீதன்

(எதாவது எழுத்துபிழையிருப்பின் மன்னித்து. தவறுகளிருப்பின் அல்லது உங்களுக்கு தெரிந்த வரலாறு பற்றிய தகவல்களை எமக்கு பின்னுட்டலினுடாக அறியத்தாருங்கள்)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக